-
வண்டி ஓட்டுனா காசு, காசு வந்தா மாஸு என வாழும் நாயகன் சேகர் வாழ்வில் ஊர்வசி எனும் ஒரு இளம் கஸ்டமர் மூலம் ஒரு திருப்பம் வருகிறது. அந்தத் திருப்பம் என்ன என்பதே இப்படத்தின் கதை.
சேகர் என்ற கேரக்டரில் நடித்துள்ள விக்ரம் ரமேஷும், ஊர்வசி என்ற கேரக்டரில் நடித்துள்ள ஷ்வாயம் சித்தாவும் இப்படத்தின் டகீலாஸ். இருவரும் நடிப்பில் அடிப்பொலி! நாயகன் ஆன விக்ரம் ரமேஷ் தான் இப்படத்தின் இயக்குநர் என்பது இன்னொரு சிறப்பு. டேவிட் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன். அவர் தனது அழுத்தமான முத்திரையை நடிப்பு மூலம் பதியவைத்துள்ளார். மஸ்தான் பாயாக வரும் சிவக்குமார் ராஜுவும் நல்ல தேர்வு
குறிப்பிட்ட லொக்கேசனில் நடக்கும் கதையை பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் ஷாட்ஸ் வைத்து மேனேஜ் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர். சபாஷ்! கலாசரணின் பின்னணி இசை கதையின் கோர்வைக்கு நல்ல பார்வையை வழங்கியுள்ளது.
ஒரு இடத்திற்குள் திரைக்கதை அடைபட்டுப் போகும் feel நமக்கு சில இடங்களில் வருவது சின்ன மைனஸ். க்ளைமாக்ஸ் ட்விஸ்டும் சிறிய ஏமாற்றமாக இருக்கிறது. படத்தில் அமைக்கப்பட்டுள்ள அழகாக அடுக்கப்பட்டுள்ள பல காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கிறது. அந்த வகையில் குறைகளை விட நிறைகளே படத்தை ஆக்ரமித்திருப்பதால் இந்த வீக்-end-ஐ கொண்டாட ஏற்ற படம் இது
3/5
-மு.ஜெகன் கவிராஜ்