ஒரு கள்வன் நல்லவனாகும் ஆதிகாலத்து கதை. But ட்ரீட்மெண்ட் சில இடங்களில் ஈர்க்கவே செய்கிறது
சத்தியமங்கலம் அருகே யானைகள் நடமாடும் ஒரு கிராமம். அங்கு தன் நண்பன் தீனாவுடன் இணைந்து திருட்டே வாழ்வு என வாழ்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். திருடப்போகும் இடத்தில் ஹீரோயின் இவானாவைச் சந்திக்கிறார். இவானா மேல் காதல் வயப்படும் ஜிவி, இவானாவை இம்ப்ரஸ் செய்வதற்காக ஒரு முதியோர் இல்லத்தில் உள்ள யாருமற்ற பாரதிராஜாவை தத்தெடுக்கிறார். அதன்பின் நடக்கும் சில கேரக்டர்களின் திடுக்கிடும் மன மாறுதல் கள் தான் படத்தின் திரைக்கதை
கதையின் நாயகன் ஜிவி பிரகாஷ் தன் வழக்கமான மீட்டரில் நடித்துள்ளார். இவானா அழகாக இருப்பது போல சிறப்பாக நடித்துள்ளார். பாரதிராஜா தன் இருப்பை படமெங்கும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். சின்னச் சின்ன காட்சிகளில் கூட பெரிய உணர்வுகளை தன் நடிப்பால் கொடுத்து விடுகிறார் பாரதிராஜா. ஜிவியின் நண்பனாக வரும் விஜய் டிவி தீனா அவ்வப்பொழுது கலகலப்பூட்ட முயற்சித்துள்ளார்
பாடல்களுக்கான இசையை வழங்கியுள்ள ஜிவி பாடல்களால் கவர்கிறார். பின்னணி இசையை வழங்கிய ரெவா கூடுமானவரை படத்தை காப்பாற்றியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை இயக்குநர் P.V.சங்கரே செய்துள்ளார். அழகான விஷுவல்ஸ் காண கிடைக்கிறது
படத்தின் கதையும் திரைக்கதையும் மிகவும் எளிதானது தான். ஆனால் சுற்றியிருக்கும் சூழல்களையும் கேரக்டர்களையும் சற்று வித்தியாசமாக படைத்துள்ளார் இயக்குநர். அதுவே படம் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது. ஆனால் முக்கியமாக நமக்குள் கனெக்ட் ஆகவேண்டிய எமோஷ்னல் சுத்தமாக மிஸ்ஸிங். ஒரு திருப்பம் வரவேண்டும் என்பதற்காக திணிக்கப்பட்டுள்ள காட்சிகள் படத்தை நம்மிலிருந்து அந்நியப்படுத்துகிறது. கள்வன் கவரவில்லை என்றாலும் ஒருமுறை பார்ப்பதில் தவறில்லை
3/5
-மு.ஜெகன் கவிராஜ்