பணம் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனின் ரசனைத்தன்மையை ஏளனமாக நினைத்ததின் விளைவே இப்படம்
பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பாலியல் கொடுமைகளை மையப்படுத்திய கதை இப்படத்தின் கதை. ஒரு நிஜக்கதையை துளியும் கலை நேர்த்தியற்ற முறையில் படமாக்கிப் படம் பார்ப்பவர்களை வதை செய்துள்ளார் இயக்குநர்
ஒரு கேரக்டரை உருவாக்கும் போது அக்கேரக்டருக்கான பேக்ஸ்டோரி பலமாக இருக்க வேண்டும்..ஆனால் அது இப்படத்தில் துளியும் இல்லை. அதனால் எல்லோர் நடிப்பும் செயற்கைத் தனத்தின் உச்சமாக இருக்கிறது
இன்றைய காலகட்டத்தில் செல்போன் போன்ற சாதனங்களை வைத்தே நல்ல குவாலிட்டியில் யூட்யூபில் வீடியோ போடுகிறார்கள். ஆனால் பெரிய திரையில் படமாக கொண்டுவரும் போது விஷுவலில் எவ்வளவு நேர்த்தி இருக்கவேண்டும். அதைப்பற்றி கவலையே இல்லாமல் கண்டதையும் எடுத்து குதறி வைத்திருக்கிறார்கள். சரி அரசியலாக இப்படம் சரியாக இருக்கிறதா என்றால் அப்படியும் ஒன்றுமில்லை. பெண்களுக்கு ஆதரவு என்ற போர்வையில் பெண்களுக்கு பாடமெடுக்கும் வசனங்களை பக்க பக்கமாக எழுதி வைத்துள்ளார். எதைப் பேசவேண்டும் என்ற தெளிவில்லாமல் எதையும் பேசலாம் என்ற தெளிவோடு படம் இயக்கியுள்ளார் இயக்குநர்.. So sad
இதுக்குமேலயும் சொல்றதுக்கு ஒன்றுமில்லை
1/5