பிற்படுத்தப்பட்ட மக்களின் வரலாறில் இருக்கும் சில அமானுஷ்யங்களை விளக்கி படம் துவங்குகிறது. நாயாடிகள் என்ற இனம் கேரளாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனம். அந்த மக்களுக்கு அமானுஷ்ய சக்திகளும் அதன் மூலம் சில மந்திரங்களும் இருப்பதாகவும் அவற்றை வீடியோவாக எடுத்துத் தரும்படியும் ஹீரோ ஆதர்ஷ் மதிகாந்தம் உள்பட ஆறுபேருக்கு ஒரு அசைன்மென்ட் வருகிறது. அந்த அசைன்மெண்ட்-ஐ அவர்கள் எப்படி முடிக்கிறார்கள்? அதன் மூலம் அவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் வருகின்றன என்பதே கதை.
ஹீரோ ஆதர்ஷ் மதிகாந்தம் உள்பட யாருமே நடிப்பில் பெரிய அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் படத்தில் அவர்களின் நடிப்பு பெரிதாக எடுபடவில்லை.
கதையில் இருந்த புதுமையை திரைக்கதையில் கொண்டு வந்திருக்கலாம். இசை ஒளிப்பதிவு என டெக்னிக்கல் டீமின் உழைப்பும் பெரிதாக சோபிக்கவில்லை
புதியவர்களின் ஆர்வம் மட்டுமே மிஞ்சியிருக்கும் இந்த நாயாடி நம்மை ஓடிவிட்டு அடிக்கிறது
1.5/5
-மு.ஜெகன் கவிராஜ்
#NAAYAADI #நாயாடி