பழமையை கண்களில் காட்டி நெஞ்சினில் ஏற்றும் சினிமாக்கள் எப்பவுமே ரசிக்க வைக்கும். அந்த வகையில் போத்தனூர் தபால்நிலையம் படமும் நம்மை ஈர்க்கிறது.
1990 கால கட்டத்தில் நடக்கும் கதை இது. கேரளா அருகில் உள்ள போத்தனூர் என்ற ஊரில் ஒரு பழமையான தபால் நிலையம். அங்குள்ள 6 லட்சத்திற்கும் அதிகமான பணம் ஒரு நூதன முறையில் திருடு போகிறது. திருட்டுப்பழி நாயகன் ப்ரவீனின் அப்பா மீது விழும் சூழல் எழ, நாயகன் மிஸ் ஆன பணத்தை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதே படத்தின் கதை
ப்ரவீன் அறிமுகம் புதுமுகம் என்ற முகங்களை தாண்டிய ஒருமுகமாக திரையில் மின்னுகிறார். மிகச்சில இடங்களில் மட்டுமே அவரது நடிப்பில் செறிவு தேவை. மற்றபடி Good performance. நாயகிக்கு ஓரளவு நல்ல வேடம். பொருந்தி இருக்கிறார். ப்ரவீனின் நண்பனாக வருபவரும் பரவாயில்லை ரகம். ப்ரவீனின் அப்பா கேரக்டரில் வருபவர் மிகச்சிறப்பாக நடித்துள்ளார் வெல்டன்!
படத்தின் குறிப்பிடக்கூடிய அம்சமாக கலை இயக்கம் இருக்கிறது. நம்மை 90 காலகட்டத்திற்கு அழைத்துச் செல்ல நல்ல உழைப்பை கொடுத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர். பின்னணி இசை பாடல்கள் இரண்டும் கூட ஓகே ரகம். ஒளிப்பதிவில் நல்லதொரு கலைநேர்த்தி இருக்கிறது. அது படத்திற்கு பெரும் ப்ளஸாக இருக்கிறது.
படத்தின் முன்பாதியில் இருந்த நேச்சரன்ஸை பின்பாதியிலும் கொண்டு வந்திருக்கலாம். போஸ்ட் ஆபிஸ் பின்னணியில் ஒரு ராபரி க்ரைம் ஸ்டோரி என்பதே தமிழ்சினிமாவிற்கு புத்தம் புதுசு என்பதால் அவசியம் இப்படத்தை ஒருமுறை ஆஹா ஓடிடியில் ஆற அமர்ந்து காணலாம்
-மு.ஜெகன் கவிராஜ்