ராஜாவாக இருக்கும் ஒருவர், எக்ஸ்ட்ராவாக கிளிகளை வைத்துக்கொண்டால் என்னவாகும்? இதுதான் ராஜாகிளி
அதி தீவிர முருக பக்தரான ஒரு தொழிலபதிபர், மனைவி இருக்கும் போதே மற்றொரு தொடர்பு வைத்துக்கொள்கிறார். அந்தத் தொடர்பு போதாதென்று கல்லூரி மாணவி ஒருவரோடும் தொடர்பு கொள்கிறார். அந்தத் தொடர்பு ஒருகொலை அளவிற்குச் செல்கிறது. அதன்பின் அந்த அதி தீவிர முருகபக்த தொழிலதிபருக்கு என்னென்ன நடக்கிறது என்பதே படத்தின் மொத்தக்கதை, திரைக்கதை எல்லாம். (இது தமிழ்நாட்டில் ஹோட்டல் பிஸ்னெஸில் கொடிகட்டிப் பறந்த ஒரு தொழிலதிபர் வாழ்வில் நடந்த சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட சினிமா என்பது அடிஷ்னல் தகவல்)
கதையின் நாயகனாக தம்பி ராமையா. மனிதர் கிடைத்த எல்லா கேப்-களையும் நிரப்பியுள்ளார். பெண்களை வளைக்கும் விதமாக அவர் பேசும் தோரணையும், கடைசியில் அவர் நிலைகுலைந்து திரியும் போதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகிகளில் ஸ்வேதா மட்டுமே கவனம் ஈர்க்கிறார். துணிச்சலாக தன் கேரக்டரை எடுத்து நடித்துள்ளார். தம்பி ராமையாவின் கடைசிகால அட்வைஸராக சமுத்திரக்கனி நடித்துள்ளார். அந்தவேலை அவருக்கு இயல்பாக வருமென்பதால் நன்றாக நடித்துள்ளார். ஏனைய கேரக்டர்களும் ஓகே ரகம் தான்
படத்திற்கு தம்பி ராமையா தான் இசை. இரண்டு பாடல்கள் கேட்கும்படியாகவே இருக்கிறது. பின்னணி இசையில் கூட குறையில்லை. ஒளிப்பதிவாளர் கதைக்குத் தேவையானதை செய்து கொடுத்துள்ளார்.
உமாபாதி எழுதி இயக்கியுள்ளார். எழுத்தில் காரசார Content என்பதால், தாரளமாக வசனங்களில் விளையாடியுள்ளார். போலவே விறுவிறு திரைக்கதையும் அவருக்கு கை வந்துள்ளது. பேமிலி படம் போல் துவங்கி, நல்ல போதனையோடு சென்று திரில்லர் படம் போல முடிகிறது ராஜாகிளி. நிச்சயமாக பெரிதாக ஏமாற்றாத படம்
ராஜாகிளி- சும்மா கிழி
3/5
-வெண்பா தமிழ்