Tamil Movie Ads News and Videos Portal

சபரி- விமர்சனம்

இந்த சபரிக்கு சபாஷ் போடலாமா?

வரலெட்சுமி சரத்குமார் தன் கணவன் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் மகளோடு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கணவனுக்கு தன்னைத் தவிர்த்து வேறு தொடர்பு இருப்பதாக அறிகிறார். அதனால் கணவனை விட்டு விலகி தனியாக வாழ்கிறார். இந்நிலையில் மைம்கோபி குறுக்கே புகுந்து வரலெட்சுமியின் குழந்தை தன் குழந்தை என கேஸ் போடுகிறார். ஆனால் மைம் கோபி வரலெட்சுமி கண்களுக்கு மட்டுமே தெரிகிறார். வரலெட்சுமி மட்டுமல்ல இந்த இடத்தில் ரசிகர்களும் குழம்பிவிட்டனர். இந்த குழப்பத்திற்கான தீர்வு என்ன என்பதை க்ளைமாக்ஸில் சொல்கிறார்கள்

வரலெட்சுமி தைரியலெட்சுமியாக ஸ்கோர் செய்கிறார். நல்ல நடிப்பின் மூலம் படத்தைத் தாங்கிப்பிடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராமிற்கு பெரிய வேலையில்லை. ஆனாலும் கொடுத்த வேலைக்கு அவர் குறை வைக்கவில்லை. மைம்கோபி ஓகே ரகம்..ஏனைய நடிகர்களும் பரவாயில்லை

இப்படியான திரில்லர் படங்களுக்கு இசை மிகவும் முக்கியம். அதை இசைஞர் ஓரளவு உணர்ந்து வாசித்துள்ளார். ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது

திரைக்கதையில் நிறைய தெலுங்கு வாடை. காட்சிகளிலும் அதை உணர முடிந்தது. டெக்னிக்கலாக நல்ல படமாக அமைந்துள்ள சபரி, எமோஷ்னல் ஏரியாவில் இன்னும் ஸ்கோர் செய்திருந்தால் ஜெயித்திருக்கும்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்