கதை புதிது! But திரைக்கதை?
லெட்சுமிபுரம் என்ற ஒரு கிராமம். அங்கு செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு சுவற்றில் கள்ள உறவு வைத்துள்ள ஜோடிகளைப் பற்றி எழுதி வைக்கப்படுகிறது. அப்படி எழுதி வைக்கப்படுவதால் அந்த ஜோடிகள் தற்கொலை?! செய்து கொள்கிறார்கள். இப்படியான விநோதங்களுக்குப் பின்னால் இருக்கும் இருளும் வெளிச்சமும் தான் படத்தின் கதை
படத்தை ஒட்டுமொத்தமாக தன் நடிப்பால் தாங்குகிறார் நாயகி பாயல் ராஜ்புத்தின். அவரது க்ளாமரும், ஆக்டிங்கும் அல்டி ரகம். அஜ்மல், நந்திதா ஸ்வேதா, அஜய் கோஸ், ஸ்ரீதேஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.
அஜனேஷ் கோஷ் தன் இசையால் படத்தை காப்பாற்ற முயற்சித்துள்ளார். தாசரதி சிவேந்திராவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலத்தை அளித்துள்ளது. எடிட்டர் இன்னும் ஷார்ப்பாக செயல்பட்டிருக்கலாம்
அதீத பாலுணர்வுக்கு நிம்போமேனியா என்ற ஒரு நோயைக் காரணமாக குறிப்பிட்டு அதைப்பற்றி டீடைல்ஸையும் எடுத்து கதையாக்கிய விதத்தில் இயக்குநர் அஜய் பூபதி கவனம் ஈர்க்கிறார். ஆனால் இந்தக் கதையை படமாக்கிய விதத்தில் தான் பல சமரசங்களைச் செய்துள்ளார். ஊரில் நடப்பது தற்கொலைகள் அல்ல கொலைகள் என தெரியவரும் இடமும், அந்தக் கொலைகள் நடத்தப்படுவதற்கான ப்ளாஷ்பேக் காட்சிகளும் இன்னும் உயிரோட்டமாக அமைந்திருக்க வேண்டும். படத்தோடு ஆடியன்ஸ் முழுமையாக கனெக்ட் ஆகவேண்டும் என்றால் ஓரளவாவது லாஜிக் பார்த்து வொர்க் பண்ணவேண்டும். அதை இந்த டீம் தவறவிட்டுள்ளது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். சேம்டைம் வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துகள்
2/5
-மு.ஜெகன் கவிராஜ்