போர்தொழில் ரேஞ்சிற்கு பில்டப் கொடுக்கப்பட்ட தி ஸ்மைல் மேன் என்ன ரேஞ்சில் ரிசிவாகியுள்ளது?
முன்னாள் சிபிசிஐடி-ஆன சரத்குமார் விபத்து ஒன்றில் சிக்கி ஓய்வில் இருக்கிறார். அவரின் விபத்திற்குப் பின் மிகவும் உருக்கமான கதை ஒன்று உள்ளது. மேலும் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஸ்மைல் மேன் கொலைகள் மீண்டும் நடக்கிறது. இதற்காக விசாரணையில் ஸ்ரீகுமார் பரபரப்பாக இயங்குகிறார். ஆனாலும் அவருக்கு சரத்குமாரின் உதவி தேவைப்படுகிறது. அல்சைமர் நோயிலிருந்து மீண்டெழும் சரத் சீரியல் கொலையாளியை கண்டு பிடித்தாரா? என்பதே கதை
சரத்குமாருக்கு 150-ஆவது படம் இது. வாழ்த்துகள் சரத். படத்தில் நோயால் பாதிக்கப்பட்ட கேரக்டரில் வரும்போது மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இத்தனை வருடகால அனுபவத்தை நடிப்பில் கொட்டியுள்ளார். ஸ்ரீகுமார் கொடுத்த வேலையை குறைவின்றிச் செய்துள்ளார். ராஜ்குமார் ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். வில்லன் கோஷ்டி அபாரம்
படத்தில் இசைக்கு பெரியளவில் வேலை. அதை உணர்ந்து இசைஞர் குழு ஓரளவு உழைத்துள்ளது. ஒளிப்பதிவாளர் தன் டீமோடு இணைந்து கடும்பணி செய்துள்ளார். அந்த ரிசல்ட் விஷுவலில் தெரிகிறது
கதையாகவே மிகவும் பழசு என்பதால் திரைக்கதை பெரிதாக ஈர்க்கவில்லை. இப்படியான சீரியல் கில்லர் படங்களுக்கு திரைக்கதை தான் முதல் ஹீரோ. அதைச் செப்பணிடாமல் விட்டிருக்கிறார் இயக்குநர். மேக்கிங்& காஸ்டிங்கில் கொடுத்த எபெக்டை எழுத்திலும் கொடுத்திருந்தால் ஸ்மைல் மேன் சக்ஸஸ் மேன் ஆகியிருப்பார்
2.5/5
-வெண்பா தமிழ்