சிறையில் இருந்து தப்பிக்க திட்டமிடும் ஹீரோ! அதற்கான காரணம் என்ன..பின் கதை என்ன?
தாதாவின் அடியாளாக வேலை செய்கிறார் ஹீரோ ஹிருது ஹாரூன். அவருக்கு ஆதரவற்ற இல்லத்தில் வளரும் அனஸ்வரா மீது காதல். தன் ஆசைக்காதலியை ஒருவன் டார்ச்சர் செய்ய, அவனைப் போட்டுத்தள்ளி விட்டு சிறைக்குள் செல்கிறார். சிறையில் பாபிசிம்ஹா தீயோரை களையெடுத்து விட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். ஹீரோ ஹிருது ஹாரூனுக்கு பாபிசிம்ஹா உள்ளிட்ட பலரையும் அள்ளிக்கொண்டு சிறையில் இருந்து தப்ப வேண்டும் என்பது அவா. அது எப்படி நிறைவேறியது என்பதை திரைக்கதையாக விரித்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டரான இயக்குநர் பிருந்தா
அறிமுக நடிகர் என்பதை நம்ப மறுக்கும் அளவில் எதார்த்தமாக நடித்துள்ளார் ஹிருது ஹாரூன். பாபிசிம்ஹா வழக்கம் போல் தன் பணியை செவ்வனே செய்துள்ளார். நாயகி அனஸ்வரா கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை. ஆர்.கே சுரேஷ், முனிஷ்காந்த், பி.எல் தேனப்பன் ஆகியோரும் படத்தில் பங்காற்றியுள்ளார்கள்.
பின்னணி இசையின் தேவை எவ்வளவு என்பதை உணர்ந்து இசையமைத்துள்ளார் சாம்.சி.எஸ். பிரியேஸ் குருசாமியின் கேமரா தரமான விஷுவல்ஸை அள்ளி வந்திருக்கிறது
சிறைச்சாலையை மையமாக வைத்து கதை அமைத்ததில் கவனம் பெறும் பிருந்தா மாஸ்டர் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். என்றாலும் தக்ஸ் ஒரு தரமான முயற்சி
3/5
-மு.ஜெகன் கவிராஜ்