தம்பதிகளின் எமோஷ்னல் ஏரியாவை வைத்து பிஸ்னெஸ் செய்யும் கயவர்களின் கதை
கதையின் நாயகன் விவேக் பிரசன்னா அவர் மனைவி சாந்தினி. இருவருக்கும் நான்கு வருடங்களாக குழந்தை இல்லை. அதற்காக ஒரு மருத்துவமனையை நாடுகிறார்கள். அங்கு ஓர் அதிர்ச்சி நிகழ்கிறது. இவர்களைத் தவிர்த்து இன்னும் இரு கதைகள் படத்திற்குள் ட்ராவல் ஆகின்றன. மெயின் கதைக்குள் இந்த இரு கதைகள் எப்படி நுழைந்து முடிகின்றன என்பதே ட்ராமாவின் பயணம்
நடிகர்களில் சொல்லிக்கொள்ளும் படியாக யாருமே ஜொலிக்கவில்லை. விவேக் பிரசன்னா குற்றவுணர்ச்சியுள்ள கணவனாக கூடுமானவரை நன்றாக நடித்துள்ளார். சாந்தினி, சஞ்சீவ், ஆனந்த் நாக், பூர்ணிமா ரவி, ப்ரதோஷ், ராமா, ப்ரதீப் கே.விஜயன், ஈஸ்வர், நிழல்கள் ரவி, வையாபுரி உள்ளிட்ட நட்சித்திரங்கள் எல்லோரும் கொடுத்த வேலையை சில குறைகளோடு தான் செய்துள்ளனர். மறைந்த நடிகர் மாரிமுத்து ஒருகாட்சியில் முத்திரைப் பதித்துச் சென்றுள்ளார்
அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை தரமாக செய்ய முயற்சித்துள்ளார். கிடைத்த பட்ஜெட்டில் அவர் செய்திருக்கும் லைட்டிங் பல இடங்களில் பளிச்சிடுகிறது. R.S ராஜ்பிரதாப் இசையில் பாடல்கள் ஒகே ரகம். தாய்மைச் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் சிறப்பு. எடிட்டர் நினைத்தால் இன்னும் 10 நிமிடங்கள் குறைத்திருக்கலாம்
கருத்தரிப்பு மையங்கள் நாம் யோசித்திராத குற்றங்களைச் செய்வது போன்ற ஒரு கதையை யோசித்துள்ளார் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன். ஆனால் திரைக்கதையில் அதைச் சரியாக கன்வே செய்யத் தவறியுள்ளார். அதனாலே டைட்டிலுக்கேற்றாப் போலவே படமும் அமைந்துவிட்டது
2.25/5
-வெண்பா தமிழ்