கோபம் கொண்ட ஊருக்கு அந்தக் கோபத்தால் மரணித்த இருவரின் சாபம் விழ, அந்தச் சாபத்தை ஹீரோ எப்படி செயலிழக்க வைக்கிறார் என்பதே விரூபாக்ஷா
ஒரு பேய்ப்படத்திற்கு உண்டான எல்லாப் பயங்கரங்களோடும் துவங்குகிறது படம். அதுவும் முதல் காட்சி அதி பயங்கரம்.
சாய்தரம் தேஜ் தன் நடிப்பில் முக்கால் கிணற்றைத் தாண்டியிருக்கிறார். ஓவர் எமோஷ்னலை கன்ட்ரோல் பண்ணியிருந்தால் இன்னும் சிறப்பான நடிப்பாக இருந்திருக்கும். சம்யுக்தா மேனன் நடிப்பிற்கும் மேற்சொன்ன வார்த்தைகள் பொருந்தும். நின்று நிதானமாக நடித்தாலும் வில்லன் கேரக்டர், சிவயோகி கேரக்டர், பூசாரி கேரக்டர் அக்கா கேரக்டர் அனைத்தும் நச் ரகம்
படத்தின் பிரதான ஹீரோவாக இருப்பது ஒளிப்பதிவு. ஒவ்வொரு ப்ரேமிங்கும், லைட்டிங்கும் பின்னுகிறது. இரவுக்காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஷாம்தத் சைனுதீன் தனது முழு வித்தையைக் காட்டியுள்ளார். பாடல்களில் தமிழ் வரிகளை பழநிபாரதி எழுதியுள்ளார். அவரது வரிகள் வழமை போல் அருமை. பின்னணி இசையில் இசை அமைப்பாளர் தேவையற்ற சத்தங்களை குறைத்து தேவைப்படும் இடத்தில் சரியாகவும் கொடுத்து அசத்தியுள்ளார். வரைகலை தேர்வு ஓ.கே ரகம்
ஊரையே அழிக்க வேண்டி முடிவெடுத்துள்ள இரு பிராதான கேரக்டர்களும், தங்களுக்கான நியாயத்தைச் சொல்லும் இடம் படத்தின் ஹைலட். அவர்கள் தரப்பின் நியாயம் நியாயமாக இருப்பதாலே படத்தின் திரைக்கதை தடம் புரளாமல் இருக்கிறது. ஒவ்வொரு காட்சிக்குள்ளும் ஒரு சர்ப்ரைஸ் வைத்து நேர்த்தியாக உழைத்துள்ளனர் திரைக்கதை ஆசிரியர் சுகுமாரும், இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டுவும்.
விரூபாக்ஷா ஹாரர் விரும்பிகளை ஏமாற்றாது
3/5
-மு.ஜெகன் கவிராஜ்
#விருபாக்ஷா #Virupaksha