Tamil Movie Ads News and Videos Portal

ஷாட் பூட் 3- விமர்சனம்

 

ஹிட்-ஐ குறிவைக்காமல் கிட்-ஐ குறிவைத்து வெளியாகியுள்ளது ஷாட் பூட் 3 படம்

சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் காஸ்ட்லியான அடுக்ககத்தில் வாழும் தம்பதி வெங்கட் பிரபு ஸ்நேகா. இவர்களின் ஒரே மகனான கைலாஷ் கீத் தனக்கு துணையாக ஒரு தம்பி பாப்பா வேணும் எனக் கேட்கிறான். 24 ஹவர்ஸ் வொர்க்லே இருக்கும் அவர்கள், அவன் கோரிக்கையை மறுக்கிறார்கள். பின் கைலாஷின் ஆசையை உணர்ந்து அவனது வகுப்பு நண்பர்களான ப்ரணிதி, வேதாந்த் ஒரு நாயை பரிசளிக்கிறார்கள். கைலாஷ் ஆசையாய் கொஞ்சி மகிழும் அந்த நாய் திருடுபோகிறது. அதை மீட்கும் போராட்டத்தில் பயணிக்கிறது படத்தின் மீதி திரைக்கதை

சிறுவன் கைலாஷ் கீத் சிறப்பான உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்துள்ளான். பிறப்புலே டெக்னாலஜிகளின் துணையோடு வரும் இப்போதுள்ள பிள்ளைகளின் உடல்மொழியை சரியாக பிரதிபலித்துள்ளார் கைலாஷ். போலவே ப்ரிதிணி, பூவையார், வேதாந்த் உள்ளிட்ட சிறார்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கணவன் மனைவியாக நடித்துள்ள வெங்கட் பிரபு ஸ்நேகா இயல்பை மீறாமல் வசீகரிக்கிறார்கள். சில இடங்களில் வரும் யோகிபாபு நிஜமாகவே சிரிக்கும் படியாக கவுண்டர் அடிக்கிறார். சாய் தீனாவும் ஓகே ரகம். மேக்ஸ் என்ற நாயும் தன் பங்கை நிறைவு செய்துள்ளது

ஒளிப்பதிவில் பெரு நிறைவுமில்லை. பெரிய குறையுமில்லை.
ராஜேஷ் வைத்யாவின் இசையில் “பால்மழை தூரலில் வால் முளைத்த வானவில்” எனத்துவங்கும் பாடல் அருமையாக உள்ளது. பின்னணி இசையும் படத்திற்கு நல்ல மைலேஜ் கொடுத்துள்ளது.

நாய் செண்டிமெண்ட் கதை என்பதால் எளிதாக நமக்குள் கனெக்ட் ஆகிறது. மேலும் சிறுவர்களின் உலகத்திற்குள் நம்மை கொண்டுபோன விதத்திலும் இயக்குநர் அருணாச்சலம் வைத்யாநாதன் அசத்திவிட்டார். சிற்சில இடங்களில் சின்னச் சின்ன தொய்வு தெரிந்தாலும் ஓய்வு நாட்களை குழந்தைகளோடு கழிக்க இந்தப்படம் நல்ல சாய்ஸ்!
3/5
-மு.ஜெகன் கவிராஜ்