சாந்தகுமாரிடம் இருந்து மீண்டும் ஒரு Feel good சினிமா
ஒரு படைப்பாளி தன் படைப்பின் எண்ணிக்கையால் நினைவுகூரப்படுவதில்லை. தரத்தால் தான் நினைவுகூரப்படுகிறார். அதை உணர்ந்து படம் இயக்க முடிவு செய்துள்ளார் இயக்குநர் சாந்தகுமார்
கொடைக்கானலில் சித்த மருத்துவராக இருக்கிறார் அர்ஜுன் தாஸ். அங்கு ஒரு ஹோட்டலுக்கு மேனஜர் வேலைக்காக வருகிறார் தான்யா. இருவருக்கும் காதல் வளர்கிறது. அந்தக் காதலைக் கண்டு பொறாமை கொள்கிறார் சுஜித் சங்கர். அதற்குப் பின் ஒரு வலுவான காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் என்ன என்பது ஒரு எமோஷ்னல் ட்விஸ்ட்
அர்ஜுன் தாஸ் இயக்குநரின் நடிகனாக நன்றாக மிளிர்கிறார் இப்படத்தில். சுஜித் சங்கரின் வில்லனத்தனம் மிரட்டுகிறது. தான்யா கஞ்சா கடிக்கும் காட்சிகளில் பதற வைத்தாலும், சில எமோஷ்னல் காட்சிகளில் கணிசமாக ஸ்கோர் செய்துவிடுகிறார். ரேஷ்மாவின் நடிப்பு மேல் சொன்ன மூவரையும் எளிதாக டாமினேட் செய்துவிடுகிறது. வெகு இயல்பாக உணர்வுகளை கடத்துகிறார் அவர்
ஒரு திரில்லர் மிஸ்டரி சினிமாவிற்கான ஷாட்ஸை எப்படி கம்போஸ் பண்ணணும் என்ற வித்தையை அறிந்து உழைத்துள்ளது கேமராமேன் சரவணன் இளவரசு டீம். தமனின் இசையும் கதை சொல்கிறது. நல்ல பின்னணி இசை நம்மை கதையோடு அழைத்துச் செல்கிறது.
படத்தின் கதை வெகு சாதாரணமானது என்பது. ஒரு வகையில் பலமாகவும் பலவீனமாகவும் அமைந்துள்ளது. இவ்வளவு சின்ன கதைக்கு இவ்வளவு பில்டப்பா? என்ற எண்ணமும், பராவாயில்லையே சின்ன கதைக்குள்ளும் இவ்வளவு விசயங்களைச் சொல்ல முடிகிறதே என்ற எண்ணமும் ஒருசேர தோன்றுகிறது. நடிகர்களின் நடிப்பு, படத்தின் வசனங்கள் பெரும்பலம் என்றால், யூகிக்க முடிந்த க்ளைமாக்ஸ், வில்லன் தன் மனைவியை அடக்கும் காட்சிகள் எல்லாம் ரொம்ப நார்மலான சினிமாவாகி விடுகிறது. இன்னும் சற்று சிரமேற்கொண்டிருந்தால் இந்த ரசவாதி பெரும் ரசவாதத்தை நிகழ்த்தியிருக்கும் பச்
சாந்தகுமாரின் அழகான மேக்கிங் மட்டும் போதும் என்ற ரசனைவாதியாக நீங்களிருந்தால் இந்த ரசவாதி உங்களுக்கானவன்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்