2019-ஆம் ஆண்டில் ஆந்திராவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது தண்டேல்
மீனவ கிராமத்தில் வசிக்கும் நாக சைதன்யா, சாய் பல்லவி இருவரும் காதலர்கள். மீன்பிடி தொழில் செய்யும் நாக சைதன்யா குஜராத் அரபிக்கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கிறார். அதில் சாய் பல்லவிக்கு விருப்பம் இல்லை. ஏன் என்றால் திரும்பி வருபதற்கு ஒன்பது மாதங்கள் ஆகும். ஆனால் ஹீரோ 22 குடும்பங்களுக்காகச் செல்கிறார். ஆனால் அவர் திரும்பி வருவதற்குள் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அந்தச் சிக்கலில் இருந்து அவர் மீண்டாரா? என்பதே படத்தின் கதை
நாகா சைதன்யா நடித்த படங்களில் இந்தப் படம் தான் அவருக்கான தனித்துவத்தை காட்டியுள்ளது. அவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். மீனவ மக்களின் உடல்மொழியை அப்படியே நகல் எடுத்துள்ளார்..சாய் பல்லவி வழமை போல் தன் கேரக்டரால் படத்திற்கு அருமை செய்துள்ளார் பெருமை சேர்த்துள்ளார். கருணாகரன், ஆடுகளம் நரேன், மைம் கோபி உள்ளிட்ட நம்மவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்
தேவி ஸ்ரீபிரசாத் இசையால் பெரும் மாயாஜாலம் நடத்தியுள்ளார். பாடல்களும் பி.ஜி.எம்மும் அபாரம்.ஷ்யாம் தத் ஒளிப்பதிவைக் கச்சிதமாகச் செய்துள்ளார். கடல் பரப்பு, நிலப்பரப்பு என அனைத்தையும் கேமராக் கண்கள் மூலம் அழகாக காட்டியுள்ளார்
கார்த்திக் தீடா நல்ல கதையை உருவாக்கியுள்ளார். படத்தின் திரைக்கதை, இயக்கம் இரண்டையும் செறிவாகச் செய்துள்ளார் இயக்குநர் சந்து மொண்டேட்டி.
மீனவர்களின் வாழ்வியல் துன்பத்தையும், நடைமுறை எதார்த்தத்தையும் மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளார் இயக்குநர். முதல் பாதியில் தென்றல் இரண்டாம் பாதியில் புயல் என இந்தத் தண்டேல் நம்மைத் தீண்டத் தவறவில்லை
தண்டேல்- குறி தவறேல்
3.25/5
-வெண்பா தமிழ்