டைட்டிலுக்கான காட்சியை படத்தில் கோர்த்திருக்கும் விதத்திலே இந்தப் பெருசு ரொம்ப பெருசு என புரிந்துவிடுகிறது
தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் மிகவும் வொர்த்து பீஸாக வாழ்ந்து வருகிறார் ஹீரோவின் அப்பா. ஊரில் அனைவரும் அவரைப் பெருசு என்றே அழைப்பார்கள். அப்படியான பெருமைக்குரிய நபர் திடீரென இறந்து விடுகிறார். அவர் இறப்பது அதிர்ச்சி அல்ல..இறந்த பின்னும் அவருக்கு இயங்கும் படியாக ஒரு சம்பவம் நடக்கிறது. அதுவே பேரதிர்ச்சி. ஹீரோ வைபவ் உள்பட மொத்தக் குடும்பமும் அந்த அதிர்ச்சி சம்பவத்தை ஊருக்குத் தெரியாமல் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை
படத்தின் நாயகனான ஹீரோ வைபவ் அசால்டாக நடித்துள்ளார். பால சரவணன் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். சுனில்ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, முனிஷ்காந்த், கருணாகரன், சாந்தினி தமிழரசன், நிஹாரிகா, தீபாசங்கர், சுவாமிநாதன், தனலெட்சுமி என படத்தில் நிறைய கேரக்டர்ஸ். அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்
படத்தில் இசையும் ஒரு கதை சொல்லியாகப் பயணிக்கிறது. ப்ளாக் க்யூமர் படத்திற்கான தேவையை இசையமைப்பாளர் பூர்த்தி செய்துள்ளார். ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்துள்ளது
கொஞ்சம் பிசகினாலும் முகம் சுளிக்க வைக்கும் கதை. அதை கூடுமான வரையில் விரசமின்றி எடுத்து அசத்தியுள்ளார் இயக்குநர் இளங்கோ ராம். திரைக்கதையை செம்மைப்படுத்தும் பணியைக் கூடுதலாகச் செய்திருக்கலாம்.. பெருசு செய்த காரியம் வீக் என்றாலும், பெருசுவின் வீரியம் பெருசு
3/5
-வெண்பா தமிழ்