ஷங்கர் பார்முலா துளியும் மாறாமல் மற்றொரு சினிமா! நடந்ததா மேஜிக்?
நேர்மையான கலெக்டராக இருக்கிறார் ஹீரோ ராம்சரண். அதற்கு நேர் எதிராக இருக்கிறார் அமைச்சராக வரும் எஸ்.ஜே சூர்யா. இருவருக்கும் ஏக மோதல் நிகழ்கிறது. ‘முதலில் நீதி சறுக்கும். முடிவில் அதுவே ஜெயிக்கும்’ என்பதான கதை படத்தின் கதை
ராம்சரண் தன் விண்டேஜ் சிரஞ்சீவி போல அசத்தியுள்ளார். அவரது ஆக்ரோஷமான ஆக்சன் காட்சிகள் படத்திற்கு பெரும்பலமாக அமைந்துள்ளது. வழக்கமான வில்லனாக வழக்கம் போல கத்திவிட்டுச் செல்கிறார் எஸ்.ஜே சூர்யா. சமுத்திரக்கனி, ஜெயராம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட கேரக்டர் ஆர்டிஸ்ட்ஸ் எல்லோரும் சின்னதாக அட்டென்சன் போடுகிறார்கள்..அவ்வளவே! ஹீரோயினுக்கு பெரிதாக வேலையில்லை
ஷங்கர் இயக்கும் படங்களில் விஷுவல் ட்ரீட்டிற்கு பஞ்சமே இருக்காது. இந்தப்படத்திலும் விஷுவலில் மேஜிக் நடந்துள்ளது. பின்னணி இசை பாடல்கள் படத்தை ஓரளவு தேற்றுகிறது. ஜருகண்டி பாடல் துள்ளல் ரகம்.
நேர்மைக்கும் ஊழக்கும் நடக்கும் போராட்டம் என ஜெண்டில் மேன் காலத்து கதை. ஷங்கரின் கதையைத் தான் கார்த்திக் சுப்புராஜ், திருத்தி எழுதமால் திருப்பி எழுதி கொடுத்திருக்கிறார் போல. நிறைய லாஜிக் கேள்விகளும், பழக்கப்பட்ட காட்சிகளும் படமெங்கும் நம்மைச் சோர்வடையச் செய்கின்றன. ஷங்கர் தனது கதைகள் மற்றும் மேக்கிங்கில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்தியன் 2 அளவிற்கு ஆடியன்ஸோடு டூ போடாமல் ஆக்ஷன் ட்ரீட்மெண்ட் வழங்கி ஒருமுறை பார்க்கலாம் என்ற கேட்டகிரிக்குள் வருகிறது இந்த கேம் சேஞ்சர்
2.75/5
-வெண்பா தமிழ்