பள்ளி மாணவர்களின் காதல் கல்லூரி பருவத்தை தாண்டியும் தொடர்ந்ததா? என்பதே ஒன்லைன்
ஆனால் அதற்கான ட்ரீட்மென்ட் சிலபல சமரசங்களோடு அமைந்துள்ளது. கவிதா என்ற பெண்ணும் வினோத் என்ற மாணவனும் காதலிக்கிறார்கள். கவிதாவின் தாத்தா பாரதிராஜா இவர்கள் காதலுக்கு ஒரு கண்டிசன் போடுகிறார். நீங்கள் காலேஜ் படித்து முடித்தபின்னும் இதே அன்போடு இருந்தால் இந்தக் காதலுக்கு ஓகே” என்பதே அக்கண்டிசன். அக்கண்டசனை இவர்கள் கடைபிடித்தார்களா? அதன்பின் காதல் என்னவானது என்பதே படத்தின் திரைக்கதையாக விரிகிறது
வினோத் கேரக்டரில் நடித்துள்ள இளைஞன் கிராமத்து முகக்களையோடு நன்றாக நடித்துள்ளார். கிராமத்து மாணவியாக கவிதா க்ளைமாக்ஸ் ஏரியாவில் அதகளம் செய்கிறார். தோழியாக நடித்துள்ள ஒரு பெண்ணும் வேறலெவல் பெர்பாமன்ஸை வழங்கியுள்ளார். பாரதிராஜா கண்களாலே உணர்ச்சிகளை கடத்துகிறார். வில்லனாக வரும் சுசீந்திரன் கன கச்சிதம். சில இடங்களில் மட்டும் ஓவர் ஆக்டிங் எட்டிப்பார்க்கிறது
இளையராஜா இசையில் பாடல்களும் பின்னணி ஸ்கோரும் பெரும் ஏமாற்றம். படத்தின் பட்ஜெட்டை காட்டிக்கொடுக்காமல் ஒளிப்பதிவாளர் தன் கேமராவை யூஸ் பண்ணியிருக்கிறார்
படத்தின் கதையும் களமும் மிகவும் சிறியது. என்றாலும் அதை மிகைப்படுத்தியதோடு சரியானபடி வகைப்படுத்தியும் உள்ளார் இயக்குநர் மனோஜ் பாரதிராஜா. சுசீந்திரன் கதை திரைக்கதை வசனத்தில் நல்ல கவனம் எடுத்துள்ளார். பின்பாதியில் அரை மணி நேரம் தீப்பிடிக்கும் கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் சேர்த்திருந்தால் மறக்க முடியாத காவியமாக மாறியிருக்கும் மார்கழி திங்கள். இருப்பினும் ஜஸ்ட் ஒன் டைம் வாட்ச் என்ற கேட்டகிரியில் படம் பாஸாகிவிட்டது
3/5
-மு.ஜெகன் கவிராஜ்