இசையால் சிகிச்சை பெற முடியும்? என்ற ஒரு விசயத்தை ஹாரர் கலந்து பேசியுள்ளது சப்தம்
ஹீரோ ஆதி ஒரு “கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர்”. அதாவது பேய்களிடம் பேசி பேய்கள் வெளிப்படுவதற்கான நோக்கத்தை கண்டறிபவர். மூணாறில் ஒரு கல்லூரியில் தொடர்ந்து மூன்று ஸ்டூடண்ட் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆதி கல்லூரிக்கு வருகிறார். அதன்பின் விசாரணையில் விரியும் சப்த சம்பவங்களே படம்
ஆதி அளவாக நடித்துள்ளார். ஒரு கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டரை கண்முன் நிறுத்தும் எல்லா வேலைகளையும் செய்கிறார். லட்சுமிமேனென் இன்னும் காத்திரமாக நடித்திருக்கலாம். கதையில் அவர் கேரக்டருக்கான வெளி அவ்வளவே இருக்கும் போது அவர் என்ன செய்ய முடியும்? அனுபவம் வாய்ந்த சிம்ரன் சிறப்பாக நடித்துள்ளார். லைலா ஒகே ரகம்
படத்தின் முதல் நச் சம்பவம் ஒலிக்கலவை தான். உதயகுமார் டீம் தரமான உழைப்பைச் செய்துள்ளனர். சவுண்ட் டிசைன் Sync cinema. வேறலெவல் அனுபவத்தை வழங்கியுள்ளனர். கலரிஸ்ட் ரங்கா அவர்களும் DI-யில் தரமாக வேலை செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் அருண்பத்ம நாபன்-ன் பங்களிப்பு படத்தின் ஆதார ஸ்ருதி எனலாம். தமன் இசையில் ஒரு மேஜிக் நடத்தியுள்ளார்.
டெக்னிக்கல் டீமை ஒருங்கிணைத்து தரமான அவுட்புட் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் அறிவழகன். விஷுவல் ட்ரீட் நிச்சயமாக கிடைக்கும். ஆனால் ஒகே படத்திற்கு இது போதும். சிறந்த படத்திற்கு? போதாது அல்லவா? Yes படம் கதையின் ஆழத்திலும், திரைக்கதையின் இண்ட் ரெஸ்டிலும் கோட்டை விட்டுள்ளது. ஆதரவற்ற, மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆன்மா நமது ஆன்மாவை தொட்டிருக்க வேண்டாமா? கதையின் பவுண்டேசனை ஆழப்படுத்தாமல் டெக்னிக்கல் டீமை மட்டுமே இயக்குநர் நம்பியுள்ளார்.
சப்தம்- ஒலி இருக்கு..But வழி?
2.5/5
-வெண்பா தமிழ்