ஜாதி பார்த்து கல்வி மறுக்கப்படும் அவலத்தை, தோலுரித்து காட்டுகிறார் தோழர் சேகுவேரா.
ஒடுக்கப்பட்ட எளிய மாணவன் ஒருவன் கல்லூரியில் படிப்பதற்காக போராடும் போராட்டங்களை பதிவு செய்துள்ளது படம். வலிகளை வழிந்து திணிக்காமல் ஓரளவு படத்தை சமாளித்துள்ளார் இயக்குநர்.
படத்தில் பேசப்படும் அரசியல் சமாச்சாரங்கள் எல்லாம் எந்தச் சமரசத்திற்கும் அப்பாற்ப்பட்டது. பேச வேண்டியதை சரியான காலத்தில் பேசியுள்ளார்கள்
ஒரு மெயின் கதாப்பாத்திரம் ஸ்கோர் செய்வதற்கு, எதிர்மறை கதாப்பாத்திரம் பலமாக அமைக்கப்பட வேண்டும். அதைச் சரியாக செய்துள்ளனர். படத்தில் சமுத்துவத்திற்கு எதிராக நிற்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் காத்திரமாக படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜாதிவெறி பிடித்த கல்லூரி இளைஞனும், அவனது தந்தை கேரக்டரும் நன்றாக கையாளப்பட்டுள்ளது. அவர்களின் நல்ல நடிப்பும் படத்திற்கு உதவி செய்துள்ளது. நாயகனாக நடித்துள்ள அந்த மாணவனும் பாஸ்மார்க் வாங்குகிறார். சத்தியராஜ் கேரக்டர் கச்சிதமாக அமைந்துள்ளது. அவரும் தனக்கே உரிய பாணியில் அசத்தியுள்ளார்
ஒளிப்பதிவில் சின்னதாக பட்ஜெட் தென்பட்டாலும் ஓகே தான். பின்னணி இசையில் சத்தம் சற்று அதிகம்
எழுத்தில் இருக்கும் நெருப்பை, ஆக்கத்திலும் இயக்குநர் கொண்டு வந்திருக்கலாம். சில செயற்கைத் தனமான காட்சியமைப்புகள் இன்னும் செம்மையாக்கப் பட்டிருக்கலாம்
படம் பேசவரும் பொருள் தேவையானது என்பதால் இந்த சேகுவேராவிற்கு நாம் தோள் கொடுக்க வேண்டியதாகவுள்ளது
3/5
-மு.ஜெகன் கவிராஜ்