ராஜஸ்தானில் நடக்கும் தீண்டாமையை வைத்து உருவான ஒரு தலித் சினிமா
ஹீரோ ஆபிரகாம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராணுவ அதிகாரி. நேர்மையால் மனைவியை இழந்த அவர் ராஜஸ்தானில் ஒரு கிராமத்திற்கு வருகிறார். அங்கு ஒரு தலித் பெண் பாக்ஸிங்கில் சாதிக்கத் துடிக்கிறாள். அதற்கு எதிராக உள்ளூர் சாதியவாதிகள் அணி திரள்கிறார்கள். மேலும் அவர்கள் தலித் மக்கள் மீதும் அந்தப்பெண்ணின் குடும்பத்து மீதும் நடத்தும் கொடுமைகள் பயங்கரமாக இருக்கிறது. நமது சஸ்பெண்ட் ராணுவ ஹீரோ அந்தப்பெண்ணுக்கு உதவ, அவரின் உதவி எத்தகைய சிக்கல்களுக்கு இட்டுச்செல்கிறது என்பதாக படத்தின் கதை விரிகிறது
ஆபிரகாம் அமைதியான ஆக்சனில் மிரட்டு மிரட்டு என மிரட்டுகிறார். ஹீரோயின் அமர்க்களமான நடிப்பு. க்ளைமாக்ஸ் டைமில் அவர் எடுக்கும் டைமிங் ஆக்சன் ப்ளாக் அட்டகாசம். மேலும் எமோஷ்னல் காட்சிகளிலும் பின்னியிருக்கிறார். தமன்னா கெஸ்ட் ரோல் என்பதால் ஜஸ்ட் வந்துபோகிறார். ஆசிஸ் வித்தியார்த்தி சிறந்த வில்லத்தனம் காட்டியுள்ளார்
மிகச்சிறந்த ஒளிப்பதிவால் படம் நம்மை உண்மைக்கு நெருக்கமாக்குகிறது. பின்னணி இசை தரமாக அமைந்துள்ளது. காஸ்ட்யூம்ஸ் டிப்பார்ட்மெண்ட், ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் என எல்லா டெக்னிஷியன்ஸும் நன்றாக உழைத்துள்ளனர்
வடநாட்டில் நடக்கும் தீண்டாமையை எந்த சமரசமும் இன்றி படமாக்கிய இயக்குநரின் துணிச்சலுக்கு முதலில் பாராட்டுக்கள். சாதிய வெறியின் கோரத்தாண்டவத்தை காட்சிப்படுத்தும் விதத்தில் இயக்குநரின் அறமும் உழைப்பும் பளிச்சிடுகிறது. இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்று சறுக்கலாகச் சென்றாலும் சமூகநீதியை வலியுறுத்தும் இப்படத்தை நாம் வரவேற்றாக வேண்டும்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்