மாபெரும் நோய்களுக்கும் இயற்கை முறையில் மருத்துவம் தந்தவர்கள் நம் தமிழ்ச்சித்தர்கள் என்ற தமிழ் மரபைப் பேசுகிறது அகத்தியா
ஹீரோ ஜீவா ஒரு ஆர்ட் டைரக்டர். அவர் தான் பணியாற்றும் படத்திற்காக பாண்டிச்சேரியில் ஒரு செட் போடுகிறார். அந்த படப்பிடிப்பு கேன்சலாக, அந்த செட்-ஐ கேரி ஹவுஸ் ஆக மாற்றுகிறார்கள் ஜீவாவும் அவர் நண்பர்களும். அங்கு சில அமானுஷ்யங்கள் நடக்கின்றன. அங்கு நடக்கும் அத்தனை விசயங்களும் ஜீவா வாழ்வோடு ஒத்துப் போகிறது. அந்த விசயங்கள் என்ன? என்பதை திரைக்கதை ஆக்கியுள்ளார் இயக்குநர் பா.விஜய்
ஹீரோவாக ஜீவா பெரிதாக மெனக்கெடாத நடிப்பையே வழங்கியுள்ளார். அல்லது அவரது கேரக்டருக்கான ரைட்டிங் வீக் ஆக உள்ளது. அர்ஜுன் கேரக்டர் எழுதப்பட்ட விதமும், அவரது நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. ராஷிகண்ணா படத்திற்குள் எப்படியோ தன்னைப் பொருத்திக் கொண்டுள்ளார் அவ்வளவே. எட்வர்ட் சொன்னின் ப்ளிக் வில்லனாக மிரட்டுகிறார். ராதாரவி, கிங்ஸ்ட்லி ஆகியோர் வந்த வேலையைச் செய்துள்ளனர்
யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு அம்மா பாடல் ஈர்க்கிறது. பின்னணி இசையிலும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். தீபக்குமார் பதி தனது ஒளிப்பதிவை திறம்பட செய்துள்ளார்.
நம் தமிழ் மரபைப் பேசும் படம் என்றாலும், கமர்சியலாக படத்தில் இன்னும் நிறைய வண்ணம் அடித்திருக்கலாம்..குறிப்பாக காமெடியை இன்னும் பலப்படுத்தியிருக்க வேண்டும். வரலாற்றுச் சம்பவங்களில் சில குளறுபடிகள் இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். பயம் காட்டும் படமாகவும் இல்லாமல், பாடம் சொல்லும் படமாகவும் இல்லாமல் இடையில் சிக்கித் தவிக்கிறது இந்த அகத்தியா. படத்தின் ஒரே பலம் படம் எங்குமே தொய்வடைந்து நிற்கவில்லை. அந்த வகையில் வீக்-end-ஐ அகத்தியாவோடு கழிக்கலாம்
2.75/5
-வெண்பா தமிழ்